ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் லாரி மோதி 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் – பலமனேரு தேசிய நெடுஞ்சாலையில் ஜகர்மலா என்ற பகுதியில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது லாரி மோதியது. இதில் 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.